Friday 2 November 2012

காதல்

சுடும் சூரியனையே-
சுட்டிடும்-
விழி கொண்டவள்!

மிதிபட்ட களிமண்-
என்னை-
மண் பானையாக்கி-
பிரயோசனம் செய்தவள்!

சென்றவள்-
சிரித்து விட்டு!

எனக்கு "புரை"-
ஏற்றிவிட்டு!

உஞ்சந்தலையில்-
உள்ளங்கையால்-
தட்டிடுவாள்!

உள்ளங்கை சூட்டை-
நெஞ்சு குழி வரை-
செலுத்துவாள்!

தொண்டை குழியில்-
சுடு சோறாய்-
இறங்கியவள்!

வயிற்றில் பரவும்-
காலை நேர-
தேநீரும் அவள்!

கோடைகால -
மழையும் அவள்!

மழைக்காலத்தில்-
வெயிலும் அவள்!

நிழலை விட-
நெருக்கமானவள்!

தூக்கத்தை விட-
நிசப்தமானவள்!

பேசியே-
சிறைபிடித்தவள்!

பேசாமல் இருந்து-
சிதற வைத்தவள்!

சிரித்தே-
சில்லிட வைத்தவள்!

சிரித்து பேசி-
சில்லு சில்லாய்-
ஆக்கியவள்!

"பொத்து "போன-
என் கால்களுக்கு-
பூக்கள் போல்-
இதம் தந்தவள்!

சட்டையின் -
மேல் பித்தானை-
மாட்டிவிட்டவள்!

ஒரு நெடிய-
பிரிவுக்கு பின்-
அவளை தேடி-
போகிறேன்!

கண்டவுடனே-
"தொலைத்து" கட்டபோகிறேன்!

ஆம்-
மனதில் -
கொலை வெறி!

இடுப்பில்-
கூரிய கத்தி.!

No comments:

Post a Comment

கருத்துரைக்காக காத்திருக்கிறோம்....!