Thursday 26 July 2012

கீதங்கள்


ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
   அத்தனையும் சொர்கத்தின்
   சங்கை மிகு முத்திரைகள் 

    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி
    இத்தரையோர்க் குரைத்த போதம்
    வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி
    இத்தரையோர்க் குரைத்த போதம்
    சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
    சொத்தாக கிடைத்திட்ட வேதம்
    சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
    சொத்தாக கிடைத்திட்ட வேதம்

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
    கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
    கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
    கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
    நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்
    ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து
    நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்
    ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
    மறையாய் கொண்டது இஸ்லாம்
    இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
    மறையாய் கொண்டது இஸ்லாம்
    முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட
    நெறியாய் திகழ்வது இஸ்லாம்
    முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட
    நெறியாய் திகழ்வது இஸ்லாம்

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
    கண்ணியம் காத்திடும் மார்கம்
    உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
    கண்ணியம் காத்திடும் மார்கம்
    மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
    புண்ணிய வழி சொல்லும் மார்கம்
    மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
    புண்ணிய வழி சொல்லும் மார்கம்

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள்
    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
                                               இங்கு குறிப்பிட்டுள்ள எட்டு வரிகளின்படி நடந்து கொண்டால் உலக வாழ்விழும்,மறுமை வாழ்விழும் வெற்றிபெற்று நாம் அனைவறும் சுவனத்திற்க்கு சென்றுவிடலாம் மேலும் இங்கு லிங்க் பன்னியுல்ல வீடியோவின் பாடலையும் கேளுங்கள் 

மேலும் கீதம் பெற (click this)

கீதங்கள்

அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...


 அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 அல்லாஹ்வை நாம் தொழுதால்... 


 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ


 அல்லாஹ்வை நாம் தொழுவோம்... 


 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ


 அல்லாஹ்வை நாம் தொழுவோம்... 


 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்


 அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்



                                            இந்த மாதம் ஒரு புனிதமான மாதம் ஏனென்றால் இந்த மாதத்தில்தான் நீங்கள் கேட்கும் துஆ அனைத்தும் உடனே கபுல் ஆகிவிடுகின்றன ஆகையால் உங்க்களால் எவ்வளவு தொழ முடியிமோ அவ்வளவு அளவு தொழுங்கள் தொழுவிட்டு அல்லாஹ் விடம் கேளுங்கள் அல்லாஹ் நம் அனைவறுக்கும் நற்கூலியை வழங்குவானாக..!ஆமீன்,ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

Saturday 7 July 2012

இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!

                                                                இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!



சுப்யான் பின் அப்துல்லாஹ் ஸகஃபி(ரலி) அறிவிக்கின்றார்கள்: நான் நபிகளாரிடம், “”ஆபத்துமிக்கவையாக எனக்கு நீங்கள் எடுத்துரைத்தவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிக ஆபத்துமிக்கது எது?” எனக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்துச் சொன்னார்: “இது’ நூல் : திர்மிதி

நாவைத் தவறாகப் பயன்படுத்துவதால் விளைகின்ற குழப்பமும் கலகமும் மிகக் கொடியவை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதனை எவரும் மறுக்கவும் மாட்டார்கள். ஒருவர் நாவால் மொழிகின்ற ஒவ்வொரு சொல்லும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதே. அது ஏற்படுத்துகின்ற பாதிப்பைப் பொறுத்து அது தேனாகவும் இனிக்கும்; விஷமாகவும் கொட்டும். தேனாக இனிக்குமா, விஷமாகக் கொட்டுமா என்பதைத் தீர்மானிப்பது நாவின் மூலம் சொற்களை மொழிகின்ற மனிதர்தான்.

இதனால்தான் நாவைப் பயன்படுத்துகின்ற விஷயத்தில் மிக மிக விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொற்கள்தாம் இதயங்களை இணைக்கின்றன. சொற்கள்தாம் இதயங்களைப் பிளக்கின்றன. சொற் கள்தாம் மனங்களை உடைக்கின்றன. சொற்கள்தாம் நெஞ்சங்களை நெகிழச் செய்கின்றன.

மனிதர்களை ஒன்றுசேர்ப்பதும் சொற்கள்தாம். ஒருவரைவிட்டு ஒருவர் விலகிப் போகச் செய்வதும் சொற்கள்தாம். அழ வைப்பதும் சொற்களே. சிரிக்க வைப்பதும் சொற்களே. சிந்திக்கத் தூண்டுவதும் சொற்களே. உணர்வுகளைக் கிளறச் செய்து மனிதர்களை உசுப்பி விடும் வேகமும் சொற்களுக்கு உண்டு. கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை இதமாக அமைதிப்படுத்துகின்ற ஆற்றலும் சொற்களுக்கு உண்டு.

சில சமயம் மனிதனின் எழுதுகோலே அவனுடைய நாவாக ஆகிவிடுகின்றது. “”போர்பான் மன்னர்கள் பிரான்ஸ் நாட்டின் ஆற்றல் மிக்க எழுத்தாளர்களைக் கட்டுக்குள் வைத்திருந்திருப்பார்களேயானால் போர்பான் அரசுக்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது” என நெப்போலியன் கூறினார்.

நாவால் சொல்லப்பட்டாலும் சரி, எழுதுகோல் மூலமாகத் தாளில் வெளிப்படுத்தப்பட்டாலும் சரி, சொற்களுக்கு இருக்கின்ற வலிமையையும் அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் எவராலும் மறுக்க முடியாது. தவறான சொற்கள் ஏற்படுத்துகின்ற துன்பத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இறைவன் கொடுத்த இந்த ஆற்றலை இறைவனின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தி இறைவனின் படைப்புகளை இறைவனுக்கு எதிரான கலகத்தில் தள்ளிவிடுவதை விடப் பெரும் குற்றம் வேறு உண்டா? அந்த ஆற்றலைக் கொண்டு சமுதாயத்தில் சீர்திருத்தத்தையும் நன்மையையும் தழைத்தோங்கச் செய்வதற்குப் பதிலாக குழப்பத்தையும் கலகத்தையும் உண்டு பண்ணுவதை விடப் பெரிய கொடுமை வேறு உண்டா?

நம்முடைய ஆளுமையை எதிரொளிப்பது நாம் மொழிகின்ற சொற்களே. தற்செயலாக, நம்மையும் அறியாமல் ஒரு சொல்லைத் தப்பித்தவறிச் சொல்லி விட்டாலும் அது நம்முடைய உள்மனத்தின் அடிக்குரலாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும்.

நாம் மொழிகின்ற சொற்கள் நம்மை சுவனத்தின் உயர் நிலைகளில் உயர்த்திக் கொண்டிருக்கும். நமக்குத் தெரியாமலே இது நடந்து விட்டிருக்கும். அதே போன்று நாம் சொன்ன ஒரு தவறான சொல், அல்லது தீய சொல் நம்மை மிகப் பெரும் பின்னடைவுக்குள்ளாக்கி விடும். நமக்குத் தெரியாமலே இது நடந்து விட்டிருக்கும் என நபிமொழிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

சில சமயம் நாம் சாதாரணமாக, எந்த இழப்பையும் ஏற்படுத்தாது என்று நினைத்துப் பேசி விடுகின்ற ஒரு சொல் நம்மை மோசமானவர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்றும் நபிமொழிகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாவைப் பயன் படுத்துவதில் நாம் எந்த அளவுக்கு விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

Friday 6 July 2012

சுவர்க்க வாசிகள்!!


                                                                                            சுவர்க்க வாசிகள்!!

உணவு:
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)

பானம்:
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)

ஆடை:
அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

தோற்றம்:
அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)

படுக்கை:
(பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது - ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)

வரவேற்பு:
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில் பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்). (39:73)

தங்குமிடம்:
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:12)

முன்னேற்பாடு:
அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

நிரந்தரம்:
அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.

மறந்துவிட்டு மன்னிக்கும் தன்மை!

                                                    மறந்துவிட்டு மன்னிக்கும் தன்மை!


“நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக” (87:9) மற்றும்
“நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்” (51:55)

மறப்போம் மன்னிப்போம்
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்: உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) (இவ்வாறு மன்னித்தால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது. (ஆதாரம் : புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.


நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – “மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.

“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.

‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.

அல்லாஹ் கூறுகிறான்: -
“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)

அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்“. (அல்குர்ஆன் 3:134)